Sunday 21 July 2013

அருள்மிகு ஸ்ரீ இசக்கி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு ஸ்ரீ இசக்கி அம்மன் திருக்கோவில், வீரகேரளம்புதூர்


மூலவர் : ஸ்ரீ இசக்கி அம்மன்
உற்சவர் :
அம்மன்/தாயார் :
தல விருட்சம் : ஆலமரம்
தீர்த்தம் : சிற்றாறு
ஆகமம்/பூஜை :
பழமை : 500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வீரகேரளம்புதூர்
ஊர் : வீரகேரளம்புதூர்
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு

ஊர்ச்சிறப்பு
தென்தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் தென்றல் தவழும் தென்காசி நகருக்கு கிழக்கில் 20 கி.மீ.தொலைவில் நீர்வளமும் , நிலவளமும் நிறைந்த குற்றாலச் சாரலின் குளுமையுடன் சிற்றாற்றின் வடபுரம் அமைதியும் இயற்கை அழகும் கொண்ட பேரூராக “வீரகேரளம்புதூர்” அமைந்துள்ளது.


வரலாறு

இசக்கி அம்மன் என்பவள் ஒரு கிராம தேவதை. சாதாரணமாக கிராம தேவதைகளை கிராமத்தில் உள்ளவர்கள் பெரிய அளவில் போற்றிவணங்குகிறார்கள். அவர்கள் தம்மையும் தமது கிராமத்தையும் காப்பதாக நம்புகிறார்கள். அது போல சில கிராம தேவதைகளை ஆராதிப்பத்தின் மூலம் தாமும் தமது குடும்பமும் நலமாக இருப்பார்கள், வேண்டியது கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள்.
முதலில் கிராம தேவதைகள் தம்மையும் தமது சக்தியையும் வெளிக் காட்ட கிராமமக்களை ஏதாவது ஒரு விதத்தில் பயமுறுத்துவார்களாம். பின்னர் அந்த கிராமமக்கள் யாராவது ஒருவரின் கனவில் அவர்கள் தோன்றி தான் இன்ன இடத்தில்புதைந்து உள்ளதாகவும், தன்னை வெளியில் எடுத்து வழிபட்டால் அந்த ஊரைக் காத்தபடி இருப்பேன் எனவும் கூறுவார்களாம். அதன்படி அந்த கிராம மக்கள் கனவில் வந்தபடியே அந்த தேவதைகளைக் கண்டறிந்து சிறு ஆலயம் எழுப்பி வழிபடுவார்கள். அந்த தேவதையும் அந்த ஊரைக் காத்தபடி ஊர் எல்லைகளில் அமர்ந்து இருப்பார்களாம்.
அப்படிப்பட்ட கதையின்படியே மாரியம்மனும் தன்னை வெளிக்காட்ட அம்மை நோயை உண்டாக்கி அதை குணப்படுத்த தன்னை வழிபட வைத்ததாககிராமியக் கதைகள் உண்டு. அதைப் பற்றிய கதைகளை தனியாக மாரியம்மன்ஆலயங்கள் என்பதில் விவரித்து உள்ளேன். அப்படிப்பட்ட மாரியம்மன் அம்சத்தைசேர்ந்தவள் இசக்கி அம்மன்என்றாலும்ஒருவரதுகுடும்பத்தையும் குழந்தைகளையும் காத்தருளும் தெய்வமாக அவதரித்தவளே இசக்கி அம்மன் என்பார்கள். இப்படியாகஉருவான கிராம தேவதைகள், தெய்வங்களில் ஒருவளான இசக்கி அம்மன் என்றஅம்மன் பெரும்பாலும் கன்யாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகாசி, சேலம் மற்றும் நாகர்கோவில் போன்ற தென் பகுதிகளில் அதிகம் ஆராதிக்கப்படுபவள்.அவளுக்கு தனி ஆலயங்களும் உள்ளன.

இசக்கி அம்மனை மாரியம்மனின் ஒரு அம்சமாகவே கருதுகிறார்கள்.மேலும் அந்த இரண்டு அம்மன்களும் பார்வதியின் ஒரு ரூபமே என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இசக்கியம்மன் பொதுவாக சிவப்பு உடை உடுத்தி,கையில் ஒரு குழந்தையை ஏந்தியபடியே காட்சி தருகிறாள். அவள் கருணைஉள்ளம் கொண்டவள். அவள் ஆலயத்தை சுற்றி உள்ள பால்கள்ளு என்ற பெயரில்உள்ள சில செடிகளைக் கிள்ளினால் வெள்ளை நிறத்தில் பால் போன்ற திரவம்வடியும். அதுவே அந்த இடங்களில் இசக்கி அம்மன் உள்ளாள் என்பதின் அடையாளம்என்று கூறுவார்கள். காரணம் குழந்தைகளுக்கு பால் ஊட்டி வளர்க்கும் ஒருதாயைப் போன்றவள் இசக்கி அம்மன் என்பதை அந்த சிறு செடி காட்டுகிறதாம்.

இசக்கி அம்மனை ரத்தத்தைக் குடிக்கும் நீலி என்ற யட்ஷினியின் சகோதரிஎன்றும் கூறுகிறார்கள். அந்த நீலி என்பவள் காளியின் யுத்த தேவதைகளில்ஒருவள். காளியும் பார்வதியின் அவதாரமே என்பதினால் இசக்கியம்மனும்பார்வதியை சேர்ந்த ஒரு தேவதையே எனக் கருதுவதில் தவறில்லை.

இசக்கி அம்மன் மானிட உருவு எடுத்து பூமிக்கு வந்தபோதுஅவளை வஞ்சித்து கொன்று விட்ட ஒரு செட்டியாரை பழி வாங்கும் விதத்தில் ஏழுஜென்மத்திலும் பிறப்பு எடுத்து தானே அவனை அழிக்க வேண்டும் எனசிவபெருமானிடம் வரம் கேட்டாள். அவள் கேட்ட வரத்தை தந்தாலும் ஒருநிபந்தனைப் போட்டார் சிவபெருமான். ஒவ்வொரு ஜென்மத்திலும் அவள் தன்னைசந்தித்து தனது ஆசிகளைப் பெற்றுக் கொண்டப் பின்னர்தான் அவனை அழிக்கவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதை அவள் ஏற்றுக் கொண்டாள். அடுத்த ஆறுஜென்மங்களிலும் அவளும் செட்டியாரும் பிறப்பு எடுத்தார்கள். அந்த ஆறுஜென்மத்திலும் அவளே அவரை பல வழிகளில் கொன்று பழி தீர்த்தாள்.
இனி மிஞ்சி இருந்தது கடைசி ஏழாவது ஜென்மம். மீண்டும்இருவரும் பிறப்பு எடுத்தார்கள். இசக்கி அம்மன் சிவபெருமானை தேடியவண்ணம்காட்டில் அலைந்து கொண்டு இருந்தாள். அப்போது ஒருநாள் அவள் காட்டு வழியேசென்று கொண்டு இருந்தபோது அவள் ஒரு சித்தரைக் கண்டாள். அந்த சித்தருக்குஅவள் மனிதப் பிறப்பு எடுத்து வந்துள்ளதின் காரணம் தெரியும் என்பதினால் அவளைசந்தித்தவர் அவளுக்கு சிவபெருமானும் பார்வதியும் இருந்த இடத்தைக் காட்டினார்.அதன்படி இசக்கியம்மன் சிவசக்தியை அவர்கள் உட்கார்ந்து இடத்துக்குச் சென்றுபார்த்து தனக்கு வேண்டிய வரத்தைப் பெற்றுக் கொண்டாள். அப்போது பார்வதிஅவளுக்கு துணையாக இருக்க நாகராஜரையும் அனுப்பி வைத்தாள்.

நாகராஜரும் இசக்கியம்மனும் காடு வழியே சென்று கொண்டுஇருந்தபோது அந்த வழியே ஒருவன் சென்று கொண்டு இருந்ததைக் கண்டார்கள்.அவனைப் பார்த்த நாகராஜர் இசக்கியம்மனிடம் அவன்தான் அந்த செட்டியார் எனஅடையாளம் காட்டினார். ஆகவே இசக்கியம்மன் அந்த வழிப்போக்கரிடம் சென்றுதான் ஒரு வேலை தேடுவதாகவும் அவர் வீட்டு வேலை செய்ய தன்னை வைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டாள். அந்த வழிப்போக்கனும் தனது மனைவிநிறைமாத கர்பிணியாக இருப்பதினால் அவளுக்கு உதவி செய்ய ஒரு பெண் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணியவாறு அவளை தன வீட்டில்வேலைக்கு அமர்த்திக் கொண்டான். அவன் வீட்டில் வேலை செய்யத் துவங்கினாள்இசக்கியம்மன். ஒரு நாள் அவன் வெளியில் சென்றபோது அவனை நாகராஜரைஅனுப்பி கொன்று விட்டாள்.

அந்த செட்டியாரின் மனைவிக்கு வந்துள்ள இசக்கியம்மன் ஒருபெண்ணாக இருக்காது, எதோ தெய்வமாகவே இருக்க வேண்டும் எனத் தோன்றியது.தன் கணவன் இறந்தப் பின் தானும் உயிர் வாழக் கூடாது என எண்ணியவள்இசக்கியம்மனிடம் தன் வயிற்றில் ஒரு குழந்தை வளர்கின்றது என்றும் அதைவெளியில் எடுத்துவிட்டு தன் குடலையும் வெளியில் எடுத்து விட்டு தனக்கு மரணம்கிடைக்க அருளுமாறு கேட்டுக் கொண்டப் பின் மயங்கி விழுந்து விட்டாள். அவள்வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம் இசக்கியம்மன் அவள் வயிற்றில்இருந்தக் குழந்தையை வெளியில் எடுத்து தன்னிடம் வைத்துக் கொண்டு அவள்குடலை மாலையாக்கி தன் கழுத்தில் அணிந்து கொண்டாள்.

அவளே இசக்கியம்மன் என்ற பெயருடன் ஊரின் மானுர் கால்வாயின் வடக்கில் ஒரு ஆலமரத்தடியில் எழுந்தருளி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றாள்.


திருக்கோவில் அமைப்பு

இத்திருக்கோயிலின் ஆலமரத்தடியில் ஸ்ரீ இசக்கி அம்மன் திருக்கரத்தில் கத்தி ஏந்தியவாறு சிவப்பு உடை உடுத்தி,கையில் ஒரு குழந்தையை ஏந்தியபடியே புன்முறுவலுடன் நின்ற திருக்கோலத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாள் .கற்பூர ஆரத்தியின்போது அவளது திருமுகத்தில் தவழும் புன்னகை அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும்.

இதர தெய்வங்கள்

பணையடியானும், புற்று வடிவில் நாகராஜரும் ஆலமரத்தடியில் எழுந்தருளி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார் .

திருவிழா
கோவில் கொடையிள். செவ்வாயன்று மதியம் வரை தொடர் அபிஷேகம் நடக்கும். செவ்வாய் அன்று இரவு தொடங்கி அதிகாலை வரை 'சாமக் கொடை' நடக்கிறது. இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சந்தன அலங்காரம் செய்வர்.
சாமக் கொடையின்போது 'ஆடு பலியிடுதலும்', 'அசைவப் படையலும்' நடைமுறையில் இக்கோவில்களிலும் உள்ளது. இந்த வழிபாடு, அம்மனுக்கு அல்ல; அம்மனின் காலடியில் கிடக்கும் அரக்கனுக்கு என்று சொல்லப்படுகிறது.
தீப்பந்தம் ஏந்தி, சாமி 'வேட்டைக்குப் போகுதல்', சாமி 'குறி சொல்லுதல்' போன்ற நம்பிக்கைச் செயல்பாடுகளும் இக்கோவில்களில் நடைமுறையில் உள்ளது. பொங்கல் வைத்தல், மாவிளக்கு வழிபாடு போன்றவையும் நடைமுறையில் உள்ளது.
புதனன்று காலை தொடங்கி மதியம் வரை 'பகல் கொடை' நடக்கிறது. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மாவிளக்கு, உருவம் செலுத்துவது போன்ற நேர்ச்சைகளைச் செலுத்துவர்.

திறக்கும் நேரம்:
காலை 9- 11 மணி வரை, மாலை 4-7 மணி வரையிலும் இசக்கி அம்மனை தரிசனம் செய்யலாம்.

முகவரி:
அருள்மிகு ஸ்ரீ இசக்கி அம்மன் திருக்கோவில், வீரகேரளம்புதூர்,- 627 861 திருநெல்வேலி மாவட்டம்.

1 comment: